பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-46

இதழ் - 48                                                                                       இதழ் -
நாள் : 26-03-2023                                                                        நாள் : -0-௨௦௨௩
 
ஆத்திசூடி (ஔவை)
” சீர்மை மறவேல் ”
உரை
    புகழுக்குக் காரணமான ஒழுக்கத்தை மறவாதே.
 
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
 
பாடல் – 46
    உற்றதொடைப் புண்ணுக் குடைகீறிக் காட்டிநின்றான்
    கொற்றவன்மு னுன்கங்கை கோத்திரத்தான் – வெற்றிபுனை
    மன்னான புன்னைவன வள்ளலே யாதலினால்
    எந்நாளுஞ் சீர்மைமற வேல்

உரை விளக்கம் :
     வெற்றியினைப் புனைந்திருக்கும் புன்னைவன வள்ளலே! தனக்குத் தொடையிலுற்ற புண்ணுக்கு உடையினைக் கீறி மன்னவன்முன் கங்கைகோத்திரத்தான் காட்டிநின்றான். ஆதலினால் எந்நாளும் ஒழுக்கத்தை மறவாதே.
 
விளக்கம் : 
     கொற்றவன் – வெற்றியையுடை மன்னவன். இப்பாடலில் குறிப்பிடப்படும் தொடைகீறிக் காட்டிநின்ற கங்கை கோத்திரத்தான் யாரென்று புலப்படவில்லை. இதில் குறிப்பிடப்படும் எடுத்துக்காட்டு இன்னதென்றும் புலப்படவில்லை. இலக்கைப் பதிப்பிலும் இக்கதை குறித்த குறிப்பில்லை.
 
கருத்து
    புகழெய்துவதற்குக் காரணமான ஒழுக்கத்தை என்றும் மறக்கக்கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும். 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment