பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 97                                                                                                     இதழ் - 
நாள் : 03-03-2024                                                                                    நாள் : 0-0-௨௦௨


பழமொழி – 97

” தென்னை மரத்தில் தேள் கொட்டினால் 
பனை மரத்தில் நெறி ஏறுதாம் ”
 
விளக்கம்

    தென்னை மரத்தில் தேள் கொட்டி அதன் விஷத்தன்மை பனை மரத்தில் நெறிக்கட்டுவதாக நாம் இப்பழமொழிக்குத் தவறாகப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.

உண்மை விளக்கம்

” தென்னை மரத்தில் தேள் கொட்டினால் 
பனை மரத்தில் நெறி ஏறுதாம் ”

     இங்கு தென்னை மரத்தில் தேள் கொட்டுவதும் இல்லை பனை மரத்தில் நெறி கட்டுவதும் இல்லை. கிராமங்களில் சிலர் கூடி அமர்ந்து சிலர் செய்த தவறை சுட்டிக் காண்பிப்பதும் கிண்டலாக பேசிக் கொள்வதும் வழக்கம். இந்நிலையில் உண்மையிலேயே தவறு செய்த ஒருவர் அந்த வழியில் சென்றால் அதைக் கேட்டு அக்கிராம மக்களிடம் தன்னைப் பற்றி பேசியதாகச் சண்டைக்குச் செல்வார். இதைத் தவறென அவருக்கு உணர்த்தவே “தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி ஏறுதாம்“ என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

    மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
 
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment