பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 202                                          இதழ் - 0
நாள்  :  07 / 06 / 2026                      நாள்   :  0 / 0/ ௨௦௨ 

 


இலக்கணம் கற்போம்
 
பொதுவியல் படலம்

I .பொதுவியற்பால: (12 துறைகள்) (சென்ற வாரத்தின் தொடர்ச்சி ...)

7. கற்காண்டல் :     இறந்தவனுக்குக் கல் நிறுத்த நல்ல கல்லை 
                      தேர்ந்தெடுப்பதைக் கூறுவது.

8.கற்கோள் நிலை :  தேர்ந்தெடுத்த கல்லைக் கைக்கொள்வது.

9.கல் நீர்ப்படுத்தல்:  தேர்ந்து எடுத்து வந்த கல்லை நீரில் போட்டு வைத்தல் 
                      மற்றும் நடுதற்குரிய இடத்தில் சேர்த்தலும்.

10.கல் நடுதல்:        மறவரின் நினைவாகக் கல்லை நடுதல்.

11.கல்முறை பழிச்சல்: நட்ட கல்லினை வாழ்த்துவது.

12.இற்கொண்டு புகுதல்: கோயிலை எழுப்பி அதனுள் நடுகல்லை எடுத்துச் செல்வது.



இலக்கணம் தொடரும் . . .

திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment