இதழ் - 151 இதழ் - ௧௫௧
நாள் : 30 - 03 - 2025 நாள் : ௩௦ - ௦௩ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 149
“ கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும் ”
விளக்கம்
எந்த ஒரு பொருளையும் நீண்ட நாள்களாகப் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அந்தப் பொருள் துருப்பிடித்து பயனற்றுப் போகும் என்பது இப்பழமொழிக்கு விளக்கம் ஆகும்.
“ கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும் ”
உண்மை விளக்கம்
ஒரு பொருளை எவ்வாறு பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அது யாருக்கும் பயனற்றுத் துருப்பிடித்துப் போகுமோ அதுபோல மனிதர்களாகிய நாம் நம்மை எப்பொழுதும் சுருசுருப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். சோம்பேரித்தனமாய் இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கவே “கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்” என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment