பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 77                                                                                     இதழ் - 
நாள் : 15-10-2023                                                                        நாள் : -0-௨௦௨௩
 
 
 
 
சந்தி
சந்தி
  • பகுதி, விகுதி, இடைநிலை ஆகிய பகுபத உறுப்புகள் புணரும்போது இடையில் தோன்றும் உறுப்பு சந்தி எனப்படும். 
  • சந்தி என்பதற்கு புணர்ச்சி என்று பெயர். 
  • சந்தி பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்.
  • புணர்ச்சியின்போது ஏற்படும் விகாரங்களான தோன்றல், திரிதல், கெடுதலை சந்தி என்றும் சொல்வர்.
    • ஓர் எழுத்துத் தோன்றுதலைச் சந்தி என்பர்.
      • பெரும்பாலும் த், ப், க் என்னும் மூன்று எழுத்துகளுள் ஒன்று சந்தியாக வரும்.
    • மற்றைய திரிதலையும் கெடுதலையும் விகாரம் என்றும் வழங்குவர்.
      • உடம்படுமெய்கள் (ய், வ்) சந்தியாக வருவதுண்டு. 
சான்று
  • அசைத்தான்  =  அசை + த் + த் + ஆன்
  • படிக்கிறார்    =  படி + க் + கிறு + ஆர்
  • காப்பார்      =  கா + ப் + ப் + ஆர்

     தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020
 

No comments:

Post a Comment