பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 104                                                                                                 இதழ் - 0
நாள் : 21-04-2024                                                                                   நாள் : -0-௨௦௨


இனமிகல்

  • இனமிகல் என்னும் விதியாவது வருமொழியின் முதல் எழுத்து, தனது இன எழுத்துடன் மிகுந்து புணர்வது .
  • இனவெழுத்து என்பது வல்லினத்திற்கு மெல்லினமும், இடையினம் ஒன்றிற்கொன்றும் இனவெழுத்து என்பதை முன்னர் வகுப்பிலேயே பார்த்திருந்தோம்.

சான்று

கருங்குயில் = கருமை + குயில் 
  • ஈறுபோதல் விதிப்படி மை கெட்டது
  • கரு + குயில் 
  • இனமிகல் விதிப்படி (கு = ங் )
  • கருங் + குயில் 
  • கருங்குயில் எனப் புணர்ந்தது.

       தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment