இதழ் - 101 இதழ் - ௧0௧
நாள் : 31-03-2024 நாள் : ௩௧-0௩-௨௦௨௪
- “தன்னொற்று இரட்டல்” என்னும் விதியாவது, நிலைமொழியில் தனிக் குறில் எழுத்தின் முன் மெய் வந்து, வருமொழி முதலில் உயிர்வரின் முதலில் நிலைமொழி இறுதி மெய் இரட்டும். மை விகுதி கெட்டு நிலைமொழிச்சொல் ஒற்று இரட்டிக்கும்.
சான்று
வெற்றிலை
- வெறுமை + இலை - எனப் பிரிந்தது
- “ஈறு போதல்” விதிப்படி ‘மை’ விகுதி கெட்டு வெறு + இலை என்றானது.
- “உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்” என்ற விதிப்படி, நிலைமொழியின் இறுதியிலுள்ள உகரம் கெட்டு வெற் + இலை என்றானது.
- “தன்னொற்றிரட்டல்” என்ற விதிப்படி ‘ற்’ ஒற்று இரட்டித்து வெற்ற் + இலை என்றானது.
- “உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிப்படி
- வெற்(ற் +இ)லை ‘வெற்றிலை’ எனப் புணர்ந்தது.
சிற்றோடை
- சிற்றோடை = சிறுமை + ஓடை
- சிறுமை + ஓடை- (ஈறு போதல் ‘மை’ நீங்கல் )
- சிறு + ஓடை - (உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் ‘உ’ நீங்கல் )
- சிற் + ஓடை - (தன்னொற்று இரட்டல் ‘ற்’)
- சிற்ற் + ஓடை - (உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே )
- சிற்றோடை
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment