பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 35                                                             இதழ் -
நாள் : 25-12-2022                                                நாள் : - - ௨௦௨
 
 
 
 
மருதம் நிலம் சார்ந்த ஊர்ப்பெயர்கள்
 
வயல்
     வயலும் வயல் சார்ந்த இடம் மருதம் என்பதால் வயல் என்னும் சொல்லால் உருவான ஊர்ப்பெயர்களும் இந்நிலத்தில் அமைந்துள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட வயலின் அருகே மக்கள் குடியேறி வாழ்ந்த ஊர் புதுவயல் என்றும், நீண்ட காலமாக வயல்வேலைகளை நம்பி வாழ்ந்து வந்த மக்கள் தம் பரந்த வயல் பக்கத்தில் குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்து வருவதால் அந்த ஊருக்கு நெடுவயல் என்றும் பெயர் வைத்தனர்.

விளை
     தென்னாட்டில் ‘விளை’ புலங்களையுடைய மருதநில ஊர்களை விளை என்னும் பெயரால் குறிப்பதுண்டு. விளை என்னும் பெயரில் அமைந்துள்ள ஊர்கள்  நாஞ்சில் நாட்டிலுள்ள திசையன்விளையும், களியக்காவிளையும் ஆரன்விளையும் குறிப்பிடத்தக்கவையாகும்.

வாவி
     மருதநிலத்தில் வாவி என்னும் சொல் குளத்தைக் குறிக்கும். சிறுபான்மையான ஊர்களில் வாவி என்னும் சொல் இடம்பெற்றுள்ளன. மதுரையில் கோடல் வாவி என்னும் ஊர் குளத்தில் அருகில் தோன்றியதாகும். கொங்குநாட்டிலுள்ள கரடிவாவியும், தோரனவாவி என்னும் ஊரும் மருதநில ஊர்ப்பெயர்களாக அமைந்துள்ளன.

 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment