பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 181                                                                                இதழ் - ௧
நாள் : 09 - 1 1 - 2025                                                             நாள் :    - ௨௦௨


பழமொழி அறிவோம்

பழமொழி – 181

அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்துச் சிரங்கும் ஆகாது '
விளக்கம்

     பக்கத்து வீட்டில் கடன் வாங்குவதும் நம் உடம்பில் புண் வருவதும் ஆகாது என்பது இப்பழமொழிக்கு விளக்கமாகும்.

உண்மை விளக்கம்

   நம் உடம்பின் பிட்டத்தில் புண் ஏற்பட்டால் எவ்வாறு நாம் அதைப் பார்க்கவோ மருந்திடேவோ முடியாதோ அதைப் போன்று  ஒருவன் பக்கத்து வீட்டு நண்பரிடம் கடன் பெற்றான் என்றால் அவன் வரும்போதும் போகும் போதும் அக்கடனைத் திருப்பித்தரும் வரை நண்பரின் முகத்தை எளிமையாக பார்க்க முடியாது என்பதைக் குறிக்கவே, “அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்துச் சிரங்கும் ஆகாது” இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். 

  இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினைத் வரும் வாரங்களில் தொடர்ந்து அறிவோம்...

முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment