பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 70                                                                                        இதழ் - 0
நாள் : 27-08-2023                                                                         நாள் : -0-௨௦௨௩

 
 
பதம்

பதம்
    பதம் என்பதற்கு சொல் என்று பொருள். பதம்  ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துகள் சேர்ந்து ஒரு பொருள் தந்தால் அது பதம் எனப்படும். 
 
வகைகள்
    பதம் இரண்டு வகைப்படும். அவையாவன,
  • பகாப்பதம் - பகா என்றால் பிரிக்க இயலாதது என்று பொருள்படும்.
  • பகுபதம் - பகுத்தல் என்றால் பிரித்தல் என்பது பொருளாகும்.
பகாப்பதம்
பிரிக்க இயலாத, பிரித்தால் பொருள் தராத சொல் பகாப்பதம் எனப்படும்.
 
சான்று
  • நிலம்
  • நட
  • மற்று
  • உறு
        பகுப்பாற் பயனற் றிடுகுறி யாகி
        முன்னே யொன்றாய் முடித்தியல் கின்ற
        பெயர்வினை யிடையுரி நான்கும் பகாப்பதம்.”
                                                                (நன்நூல், நூற்பா. எண். 131)
 
பகாப்பதம் இரண்டு எழுத்து முதல் ஏழு எழுத்துகள் வரை அமையும்.
  • உண்        -     இரண்டெழுத்துப் பகாப்பதம்
  • நிலம்           -    மூன்றெழுத்துப் பகாப்பதம்
  • நெருப்பு        -    நான்கெழுத்துப் பகாப்பதம்
  • பெருமிதம்       -    ஐந்தெழுத்துப் பகாப்பதம்
  • குங்கிலியம்       -    ஆறெழுத்துப் பகாப்பதம்
  • உத்திரட்டாதி      -     ஏழு எழுத்துப் பகாப்பதம்
 
பகாப்பதம் நான்கு வகைப்படும்.
  • பெயர்ப் பகாப்பதம்
  • வினைப் பகாப்பதம்
  • இடைப் பகாப்பதம்
  • உரிப் பகாப்பதம்
சான்று
  • கல், நீர், பெண்        -      பெயர்ப் பகாப்பதம்
  • வா, சொல், பார்         -    வினைப் பகாப்பதம்
  • போல், கொல், மன்    -     இடைப் பகாப்பதம்
  • நனி, தவ, உறு         -    உரிப் பாகப்பதம்
 
    தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment