பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 35                                                             இதழ் -
நாள் : 25-12-2022                                                நாள் : - - ௨௦௨
 
       
 
  தமிழ்ச்சொல் தெளிவோம்
 
 
  • இன்று என்ன சமாச்சாரம் கொண்டு வந்தாய்?
  • இன்று என்ன செய்தி கொண்டு வந்தாய்?
  • நமக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்
  • நமக்குக் கொடுக்கப்பட்ட உரிமையைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
  • எல்லா நாளும் சுப நாளே.
  • எல்லா நாளும் மங்கல நாளே.
  • ஒவ்வொருவரும் தமது இடத்தைச்  சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • ஒவ்வொருவரும்  தமது இடத்தைத் துப்புரவாக வைத்திருக்க வேண்டும்.
  • நல்லாசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையேயான சம்பந்தம் கிடைத்தற்கரியது.
  • நல்லாசிரியருக்கும் மாணவர்களுக்கும்  இடையேயான தொடர்பு கிடைத்தற்கரியது.
     மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
 
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment