இதழ் - 35 இதழ் - ௩௫
நாள் : 25-12-2022 நாள் : ௨௫ - ௧௨ - ௨௦௨௨
- இன்று என்ன சமாச்சாரம் கொண்டு வந்தாய்?
- இன்று என்ன செய்தி கொண்டு வந்தாய்?
- நமக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்
- நமக்குக் கொடுக்கப்பட்ட உரிமையைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
- எல்லா நாளும் சுப நாளே.
- எல்லா நாளும் மங்கல நாளே.
- ஒவ்வொருவரும் தமது இடத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- ஒவ்வொருவரும் தமது இடத்தைத் துப்புரவாக வைத்திருக்க வேண்டும்.
- நல்லாசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையேயான சம்பந்தம் கிடைத்தற்கரியது.
- நல்லாசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையேயான தொடர்பு கிடைத்தற்கரியது.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment