இதழ் - 171 இதழ் - ௧௭௧
நாள் : 24 - 08 - 2025 நாள் : ௧௪- ௦௮ - ௨௦௨௫
இலக்கணம் கற்போம்
பொழுது இலக்கணம்
பெரும்பொழுது
பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் காலப் பிரிவு ஆகும். பழந்தமிழர்கள் ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களையும் ஆறு பிரிவுகளாகப் பிரித்து வைத்துள்ளனர். இது நீண்டகாலப் பிரிவாக இருப்பதால் பெரும்பொழுது என வகுத்துள்ளனர். ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களும் பின்வருமாறு ஆறு பெரும்பொழுதுகளாகப் பிரித்துள்ளனர்.
- சித்திரை, வைகாசி - இளவேனில் காலம்
- ஆனி, ஆடி - முதுவேனில் காலம்
- ஆவணி, புரட்டாசி - கார்க் காலம்
- ஐப்பசி, கார்த்திகை - குளிர்க் காலம்
- மார்கழி, தை - முன்பனிக் காலம்
- மாசி, பங்குனி - பின்பனிக் காலம்
இலக்கணம் தொடரும் . . .
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment