பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 42                                                                                           இதழ் - ௪
நாள் : 12-02-2023                                                                            நாள் : ௧௨-0௨-௨௦௨௩
 
 
 
எண்
 
தமிழ் இலக்கணத்தில் எண் ஒருமை, பன்மை என இருவகைப்படும்.
 
ஒருமை
  • ஒன்றைக் குறிப்பது ஒருமை எனப்படும். 
  • உயர்திணையில் ஆண்பாலைக் குறிக்கும் சொல்லும், பெண்பாலைக் குறிக்கும் சொல்லும், அஃறிணையில் ஒன்றன் பாலைக் குறிக்கும் சொல்லும் ஒருமைச் சொற்களாகும்.
 
சான்று
  • உயர்திணை ஆண்பால் ஒருமை   -  தம்பி, கண்ணன்
  • உயர்திணை பெண்பால் ஒருமை   -  தங்கை, கண்ணகி
  • அஃறிணை ஒருமை               - அது, நாய்
 
பன்மை
  • எண்ணிக்கையில் ஒன்றுக்கு மேற்பட்டனவற்றைக் குறிப்பது பன்மை எனப்படும். 
  • உயர்திணையில் பலரைக் குறிக்கும் சொல்லும், அஃறிணையில் பலவற்றைக் குறிக்கும் சொல்லும் பன்மைச் சொற்களாகும்.
 
சான்று
  • உயர்திணைப் பன்மை  - அவர்கள், மக்கள்
  • அஃறிணைப் பன்மை  - அவை, நாய்கள்

தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் அறியலாம் . .
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment