இதழ் - 8 இதழ் - ௮
நாள் : 19-6-2022 நாள் : ௧௯ -௦௬- ௨௦௨௨
ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன.
- ஓர் ஆண்டில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன.
சலமும் மலரும் கொண்டு இறைவனை வழிபடுவர்.
- நீரும் மலரும் கொண்டு இறைவனை வழிபடுவர்.
தமிழ்மொழியின் தொன்மையைப் பறைசாற்ற ஏராளமான தொல்பொருள்ச் சான்றுகள் கிடைத்துள்ளன.
- தமிழ்மொழியின் தொன்மையைப் பறைசாற்ற மிகுதியான தொல்பொருள்ச் சான்றுகள் கிடைத்துள்ளன.
மனிதர்களுக்கு கிடைக்கக்கூடிய அனுபவமே அவர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும்.
- மனிதர்களுக்கு கிடைக்கக்கூடிய பட்டறிவே அவர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும்.
அலட்சியம் செய்யப்பட்ட குழந்தை தன்னம்பிக்கையை இழந்துவிடும்.
- புறக்கணிக்கப்பட்ட குழந்தை தன்னம்பிக்கையை இழந்துவிடும்.
( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்–641020.
No comments:
Post a Comment