இதழ் - 97 இதழ் - ௯௭
நாள் : 03-03-2024 நாள் : 0௩-0௩-௨௦௨௪

பண்புப்பெயர்ப் புணர்ச்சி விதிகள்
இடையுகரம் இய்யாதல்
- “இடை உகரம் இ ஆதல்” என்னும் விதியாவது இடையில் உள்ள உகரம் இகரமாகப் புணர்வது ஆகும்.
சான்று
- கரியன் = கருமை + அன் (ஈறுபோதல் விதிப்படி மை நீங்கியது)
- கரு (ர் + உ) + அன்
- இடையுகரம் இய்யாதல் விதிப்படி (உ= இ)
- கரி (ர் + இ) + அன்
- “ய“கர உடம்படுமெய் பெற்று
- கரி + ய் + அன்
- உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
- கரி + ய் + அன் = கரியன்
ஈறு போதல் என்னும் விதிப்படி நிலை மொழியின் இறுதி எழுத்து, “மை“ நீங்கிப் பின், கரு என்பதன் இறுதி உகரம், இடை “உ“கரம் “இ“ ஆதல் என்னும் விதிப்படி கரியாகிப் பின் 'ய'கர உடம்படுமெய் பெற்று, கரி + ய் + அன் என்பது உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ய் = ‘ய’ என்றாகி கரியன் எனப் புணர்ந்தது.
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment