பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 97                                                                                                     இதழ் - 
நாள் : 03-03-2024                                                                                    நாள் : 0-0-௨௦௨

 

பண்புப்பெயர்ப் புணர்ச்சி விதிகள்

இடையுகரம் இய்யாதல்
  • “இடை உகரம் இ ஆதல்” என்னும் விதியாவது இடையில் உள்ள உகரம் இகரமாகப் புணர்வது ஆகும்.
சான்று
  • கரியன்  =  கருமை + அன் (ஈறுபோதல் விதிப்படி மை நீங்கியது)
    • கரு (ர் + உ) + அன்
    • இடையுகரம் இய்யாதல் விதிப்படி (உ= இ)
    • கரி (ர் + இ) + அன்
    • “ய“கர உடம்படுமெய் பெற்று
    • கரி + ய் + அன்
    • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
    • கரி + ய் + அன் = கரியன்
      ஈறு போதல் என்னும் விதிப்படி நிலை மொழியின் இறுதி எழுத்து, “மை“ நீங்கிப் பின், கரு என்பதன் இறுதி உகரம், இடை “உ“கரம் “இ“ ஆதல் என்னும் விதிப்படி கரியாகிப் பின் 'ய'கர உடம்படுமெய் பெற்று,  கரி + ய் + அன் என்பது உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ய் = ‘ய’ என்றாகி கரியன் எனப் புணர்ந்தது.

          தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020 

No comments:

Post a Comment