பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 96                                                                                               இதழ் - 
நாள் : 25-02-2024                                                                             நாள் : -0-௨௦௨

 

பண்புப்பெயர்ப் புணர்ச்சி விதிகள்

மையீற்றுப் பண்புப்பெயர்ப் புணர்ச்சி
முதல் விதி
  • மையீற்றுப் பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் உள்ள முதல் விதியைக் காண்போம்.
ஈறு போதல்
  • ஈறு போதல் என்னும் விதியாவது, நிலை மொழியின் இறுதி எழுத்து நீங்கிப் புணர்வது. நிலைமொழியின் இறுதியில் உள்ள ‘மை’ என்னும் உயிர்மெய் எழுத்துக் கெட்டுப் புணரும்.
சான்று
  • பெருவழி   =  பெருமை + வழி (ஈறுபோதல் விதிப்படி ‘மை’ கெடுதல்)
      பெரு + வழி = பெருவழி  எனப் புணர்ந்தது.
  • செம்மொழி = செம்மை + மொழி (ஈறுபோதல் விதிப்படி ‘மை’ கெடுதல்)
      செம் + மொழி = செம்மொழி எனப் புணர்ந்தது. 

            ஈறு போதல் இடையுகரம் இய்யாதல்
            ஆதி நீடல் அடியகரம் ஐயாதல்
            தன்னொற் றிரட்டல் முன்னின்ற மெய் திரிதல்
            இனமிகல் இனையவும் பண்பிற் கியல்பே
                              - நன்னூல் நூற்பா எண். 136

     தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020 

No comments:

Post a Comment