இதழ் - 164 இதழ் - ௧௬௪
நாள் : 06 - 07 - 2025 நாள் : ௦௬ - ௦௭ - ௨௦௨௫
பழமொழி அறிவோம்
பழமொழி – 164
' பழுத்தோலைப் பாா்த்து குருத்தோலை சிாிக்கலாமா? '
விளக்கம்
முதிர்ந்த பழுத்த ஓலையைப் பார்த்து பழுத்துவிட்டதே என்று எண்ணி, இளம் குருத்தோலை சிரித்ததாம் என்பது இப்பழமொழியின் பொருள் ஆகும்.
உண்மை விளக்கம்
அனுபவம் வாய்ந்த ஒருவரைப் பார்த்து அனுபவம் இல்லாத ஒருவன் ஏளனமாகச் சிரிப்பது எவ்வகையிலும் அவனுக்குப் பலன் தராது. மாறாக அத்தகைய அனுபவமிக்கவர்களிடமிருந்து அநேக நற்செயல்களைக் அனுபவமற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கவே 'பழுத்தோலைப் பார்த்து குருத்தோலை சிரிக்கலாமா?' என்ற இப்பழமொழியை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment