பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் - 20                                                                   இதழ் - ௨௦
நாள் : 11-09-2022                                                      நாள் : -௦௯- ௨௦௨௨


 
 
     சென்ற வாரத்திலிருந்து தமிழில் கலந்துள்ள தெலுங்கு மொழிச்சொற்கள் எவை என்பதனைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.


  • என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்வதற்கு எதற்காக இவ்வளவு  பிகு(வு)?
  • என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்வதற்கு எதற்காக இவ்வளவு தற்பெருமை கொள்கிறாய்?
  • உணவைச் செரிக்கச் செய்யும் சக்தி சோம்புக்கு உண்டு.
  • உணவைச் செரிக்கச் செய்யும் சக்தி பெருஞ்சீரகத்துக்கு உண்டு.
  • என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.
  • என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.
  • உனக்கு ஜல்ப்பு பிடிச்சிருக்கா?
  • உனக்கு நீர்க்கோவை பிடிச்சிருக்கா?
  • என் கணக்கை நீதான் பைசல் செய்ய வேண்டும்.
  • என் கணக்கை நீதான் தீர்க்க வேண்டும்.
 
 ( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )
 

சாந்தி மகாலிங்கசிவம்

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment