பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 125                                                                                            இதழ் - ௧௨
நாள் : 15- 09 - 2024                                                                           நாள் : ௧ - ௦ - ௨௦௨௪



வினைமுற்றுத் தொடர்

  • ஒரு தொடரின் இறுதியில் இடம் பெற வேண்டிய வினைமுற்று, தொடரின் முதலில் அமைந்து அறுவகைப் பெயரைக் கொண்டு முடிவது வினைமுற்றுத் தொடர் ஆகும்.
சான்று
  • பாடினான் கண்ணன்
   இங்கு "பாடினான்" என்னும் வினைமுற்று முதலில் நின்று ஒரு பெயரைக் கொண்டு முடிந்துள்ளது.

சான்று

  • சென்றனர் வீரர்
    இத்தொடரில் 'சென்றனர்' என்னும் வினைமுற்று 'வீரர் 'என்னும் பெயரைக் கொண்டு முடிந்து இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது வினைமுற்றுத் தொடர் ஆகும்.


திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment