பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 20                                                                   இதழ் - ௨௦
நாள் : 11-09-2022                                                      நாள் : -௦௯- ௨௦௨௨

 
 
முற்றுப்போலி
     சொல்லில் உள்ள அனைத்து எழுத்துகளும் மாறியிருந்தாலும் பொருள் மாறாமல் வருவது முற்றுப்போலி எனப்படும்.
 
சான்று
  • ஐந்து  - அஞ்சு
     இச்சொல்லில் உள்ள முதல், இடை, கடை என அனைத்து எழுத்துகளும் மாறி இருக்கின்றன எனினும் பொருள் மாறவில்லை.
 
இலக்கணப்போலி
     இலக்கண வழக்கில் உள்ள ஒரு சொல் நடைமுறையில் அதாவது பேச்சு வழக்கில் முன்பின்னாக மாறி இருந்தாலும் பொருள் மாறாமல் வருவது இலக்கணப்போலி எனப்படும்.
 
சான்று
  • வாய்க்கால் -  கால்வாய்
  • முன்றில்     -  இல்முன்
    மேற்கண்ட சொற்கள் முன்பின்னாக மாறி இருந்தாலும் பொருள் மாறாமல் வருவது இலக்கணப்போலி எனப்படும்.
 
 
( தொடர்ந்து கற்போம் . . . )

தி.செ.மகேஸ்வரி

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment