இதழ் – 9 இதழ் – ௯
நாள் – 26-06-2022 நாள் – உ௬.௬.௨௰உஉ
ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறைவன்.
முதலும் முடிவும் இல்லாதவன் இறைவன்.
உக்கிரமான போர் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
பயங்கரமான போர் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
ஆபத்துக் காலத்தில் உதவி செய்தல் வேண்டும்.
இடர்ப்படும் காலத்தில் உதவி செய்தல் வேண்டும்.
வாழ்க்கையை ஆனந்தமாக வாழ வேண்டும்.
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
சக மனிதர்களை உதாசீனம் செய்யாதீர்கள்.
சக மனிதர்களைப் பொருட்படுத்தாமல் இருக்காதீர்கள்.
( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்–641020.
No comments:
Post a Comment