இதழ் - 7 இதழ் - ௭
நாள் : 12-6-2022 நாள் : ௧௨-௬-உ௦உஉ
1. மன்னித்துக் கொள்வது மனிதப் பண்புகளில் மிகச் சிறந்த பண்பு ஆகும்.
பொறுத்துக் கொள்வது மனிதப் பண்புகளில் மிகச் சிறந்த பண்பு ஆகும்.
2. எச்செயலையும் உற்சாகத்துடன் செய்தல் வேண்டும்.
எச்செயலையும் ஊக்கத்துடன் செய்தல் வேண்டும்.
3. தங்கள் உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன்.
தங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கிறேன்.
4. மணமக்கள் விவாகப் பதிவு செய்வது நல்லது.
மணமக்கள் திருமணப் பதிவு செய்வது நல்லது
5. இந்தியாவின் தேசியப் பட்சி மயில் ஆகும்.
இந்தியாவின் தேசியப் பறவை மயில் ஆகும்.
( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்–641020.
No comments:
Post a Comment