இதழ் - 190 இதழ் - ௧௯0
நாள் : 08 / 02 / 2026 நாள் : 0௮ / 0௨ / ௨௦௨௬ ஓர் அரசன் பகை அரசனின் கோட்டையைக் கைப்பற்றி வளைத்துக் கொள்வான். அப்போது முற்றுகையிடப்பட்ட அரசன் கோட்டைக்குள் இருந்து தன் மதிலைப் பகையரசன் கைப்பற்றாதவாறு நொச்சிப்பூவினைச் சூடிக்கொண்டு போரிடுதல் நொச்சித்திணை எனப்படும்.
நொச்சித்திணை துறைகள் மொத்தம் – 8
1. மறனுடைப்பாசி:
உழிஞை மறவர்களுக்குப் புறங்கொடாமல் நொச்சி மறவர்கள் போர் செய்வது.
2. ஊர்ச்செரு:
அரணுக்குப் புறத்தே உள்ள ஊரின்கண் பகைவரோடு நொச்சியார் போர் புரிவது.
3. செருவிடை வீழ்தல்:
பகைவர் உள்ளே நுழைய முடியாதபடி அரணைக் காக்கப் போரிட்டு இறந்த
மறவனைப் பாராட்டுவது.
4. குதிரைமறம்:
குதிரைப் படையின் மறமாண்பினைப் பாராட்டிக் கூறுவது.
5. எயிற்போர்:
மதிலைக் காத்து நிற்கும் நொச்சி மறவரின் மறமாண்பினைச் சிறப்பித்துக் கூறுவது.
6. எயில்தனை அழித்தல்:
எயிலைக் காக்கின்ற நொச்சி மறவர்களை பகைவர் வீழ்த்துவது.
7. அழிபடை தாங்கல்:
பகைவரால் அழிந்துபட்ட காவல் படைக்கு மாறாக பிற மறவர்கள் அக்காவலில்
நின்று தடுத்தல்.
8. மகள் மறுத்து மொழிதல்:
மகளைக் கேட்ட பகையரசனுக்கு நொச்சி வேந்தன் பெண் கொடுக்க மறுப்பது.
இலக்கணம் தொடரும் . . .
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020

No comments:
Post a Comment