இதழ் - 60 இதழ் - ௬0
நாள் : 18-06-2023 நாள் : ௧௮-0௬-௨௦௨௩ வினையெச்சம்
ஒரு வாக்கியம் வினையைக் கொண்டு முடிவது வினையெச்சமாகும். பெயரெச்சத்தையோ, வினையெச்சத்தையோ, முற்றையோ கொண்டு முடிவதாகும். பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும்.
ஒரு வாக்கியம் வினையைக் கொண்டு முடிவது வினையெச்சமாகும். பெயரெச்சத்தையோ, வினையெச்சத்தையோ, முற்றையோ கொண்டு முடிவதாகும். பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும்.
சான்று
- சென்று வந்தான்
இதில் ‘சென்று’ என்னும் சொல் ‘வந்தான்’ என்னும் வினைச்சொல்லைக் கொண்டு பொருள் முடிவைத் தருகிறது. இவ்வாறு வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.
வினையெச்சம் - வகைகள்
வினையெச்சம் கால அடிப்படையில் மூன்று வகைப்படும். அவை,
நிகழ்கால வினையெச்சம்
எதிர்கால வினையெச்சம்
- இறந்தகால வினையெச்சம்
- நிகழ்கால வினையெச்சம்
- எதிர்கால வினையெச்சம்
- இறந்தகால வினையெச்சம் உ, இ, ய் என்பவற்றை விகுதிகளாகப் பெற்று வரும்.
- வந்து போனான், பாடி ஆடினான், போய் நின்றான்
நிகழ்கால வினையெச்சம்
- நிகழ்கால வினையெச்சம் பெரும்பாலும் “அ” என்னும் விகுதி பெற்று வரும்.
- பாட வருகிறான்.
எதிர்கால வினையெச்சம்
- இன், ஆல், வான், பான் என்னும் விகுதிகளுள் ஒன்றைப் பெற்று வரும்.
- செய்யின் தருவேன், வந்தால் கொடுப்பேன்.
“செய்து, செய்பு, செய்யா, செய்யூ,
செய்தென, செய, செயின், செய்யிய, செய்யியர்
வான், பான், பாக்கு இனவினையெச்சம்: பிற
ஐந்து, ஒன்று, ஆறும் முக்காலமும் முறைதரும்.”
செய்தென, செய, செயின், செய்யிய, செய்யியர்
வான், பான், பாக்கு இனவினையெச்சம்: பிற
ஐந்து, ஒன்று, ஆறும் முக்காலமும் முறைதரும்.”
( நன்னூல் நூற்பா.343 )
இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment