இதழ் - 6 இதழ் - ௬
நாள் : 5-6-2022 நாள் : ௬-௬-உ௦உஉ
பாடத்தில் ஏற்படும் சந்தேகத்தை உடனுக்குடன் தெளிவு செய்தல் வேண்டும்.
பாடத்தில் ஏற்படும் ஐயத்தினை உடனுக்குடன் தெளிவு செய்தல் வேண்டும்.
பாரதியார் பயத்தைத் தவிர்த்தல் வேண்டும் என்கிறார்.
பாரதியார் அச்சத்தைத் தவிர்த்தல் வேண்டும் என்கிறார்.
தங்களது அனுமதியுடன் என் பேச்சைத் தொடங்கலாமா?
தங்களது இசைவுடன் என் பேச்சைத் தொடங்கலாமா?
அனைத்தையும் விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் பார்.
அனைத்தையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் பார்.
பள்ளிக்கூடங்கள் இல்லாத கிராமம் இருக்கக்கூடாது
பள்ளிக்கூடங்கள் இல்லாத சிற்றூர் இருக்கக்கூடாது.( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்–641020.
No comments:
Post a Comment