பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 201                                                                                       இதழ் - 0
நாள்  :  31 / 05 / 2026                                                                   நாள்   :   / 0 / ௨௦௨

 


இலக்கணம் கற்போம்
 
பொதுவியல் படலம்

  • வெட்சி முதல் பாடாண் ஈறாக கூறப்பட்ட படலங்கள் ஒன்பது.
  • ஆவற்றுக்குப் பொதுவாக அமைந்த துறைகளை விளக்குவதால் இது பொதுவியல் திணை எனப்பட்டது.
  • ஆசிரியர் இத்திணையை நான்காகப் பகுத்துள்ளார்.
  • அவை,
             I. பொதுவியற்பால
            II. சிறப்பில் பொதுவியற்பால
            III. காஞ்சி பொதுவியற்பால
            IV. முல்லை பொதுவியற்பால என்பவனாம்.

I. பொதுவியற்பால: (12 துறைகள்)

போந்தை: 
        சிறப்பு பொருந்திய பனம்பூ மாலையைப் புகழ்தல். (சேர நாட்டு பூ)

வேம்பு: 
        வேப்பம் பூமாலையைப் புகழ்தல். (பாண்டிய நாட்டுப் பூ)

ஆர்
        அத்திப்பூ மாலையைச் சிறப்பித்துக் கூறுவது. (சோழ நாட்டு பூ)

உன்னநிலை: 
        உன்னம் என்னும் மரத்தினது நிலையைக் கூறுவது. 
        இம்மரம் நிமித்தம் உணர்த்தும் மரம் ஆகும்.

ஏழக நிலை
        அரசிளங் குமாரனாய் ஆட்டுக்கிடாயில் ஏறிவருதல் மற்றும் 
        இளமையைப் பொருட்படுத்தாமல் அரசுரிமையை ஏற்றல்.

கழல்நிலை 
           ஓர் அரசனின் வீரக்கழலைப் புகழ்ந்து கூறுவது.
 
இலக்கணம் தொடரும் . . .

திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment