பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 79                                                                                                   இதழ் - 
நாள் : 29-10-2023                                                                                    நாள் : -0-௨௦௨௩

  
 

விகாரம்

விகாரம்

     பகுதி, விகுதி, இடைநிலை ஆகியவை புணரும்போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும். 

    விகாரத்தில் ஓர் எழுத்து தோன்றியும் மற்றொரு எழுத்தாக திரிந்தும் கெட்டும் நெடில் குறிலாகவும் மாற்றம் பெறும்.

சான்று
  • நின்றான் = நில்(ன்) + ற் + ஆன்
    • இதில்  “நில்” என்னும் பகுதியில் “ல்” ஆனது  “ன்” ஆகத் திரிந்தது.
  • வணங்கிய  =  வணங்கு + இ(ன்) + ய் + அ
    • இதில் “இ(ன்)” என்னும் இடைநிலையில் ”ன”கரம் கெட்டது.
  • கண்டான் = காண் (கண்) + ட் + ஆன்
    • இதில் “காண்” என்னும் பகுதி “கண்” எனக் குறுகியது.
  • எழுதினோர் = எழுது + இன் + ஓர் (ஆர்) 
    • இதில் “ஆர்” என்னும் விகுதி “ஓர்” என நின்றது.

     தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020.

No comments:

Post a Comment