- ஆதி நீடல் என்னும் விதியாவது, முதல் எழுத்து மீண்டும் புணர்வது.
சான்று
1. பாசிலை = பசுமை + இலை
- பசு(மை) + இலை = “ஈறு போதல்” விதிப்படி ‘மை’ விகுதி கெட்டது.
- பசு + இலை – “ஆதி நீடல்” விதிப்படி 'ப' என்னும் குறில் ‘பா’ என்னும் நெடிலாகியது.
- பாசு( ச் +உ) + இலை – “உயிர்வரின் உக்குறள் (உ) மெய்விட்டோடும்” என்னும் விதிப்படி உகரம் நீங்கியது.
- பா (ச்+இ) லை - “உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிப்படி “பாசிலை“ எனப் புணர்ந்தது.
2. மூதூர் = முதுமை + ஊர்
- மூதூர் = முதுமை + ஊர் “ஈறு போதல்” விதிப்படி ‘மை’ விகுதி கெட்டது.
- முது + ஊர் - “ஆதி நீடல்” விதிப்படி 'மு' என்னும் குறில் ‘மூ’ என்னும் நெடிலாகியது.
- மூது + ஊர் - “உயிர்வரின் உக்குறள் (உ) மெய்விட்டோடும்” என்னும் விதிப்படி உகரம் நீங்கியது.
- மூத் + ஊர் - “உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிப்படி “மூதூர்” எனப் புணர்ந்தது.
தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment