இதழ் – 10 இதழ் – ௰
நாள் : 03-07-2022 நாள் : ௦௩-௦௭-௨௦௨௨
1. மழை வெள்ளத்தில் குழந்தைகள் உல்லாசமாக விளையாடுவார்கள்.
மழை வெள்ளத்தில் குழந்தைகள் களிப்புடன் விளையாடுவார்கள்.
2. பெண்களின் முக்கிய உள் உறுப்புகளில் ஒன்று கர்ப்பப்பை ஆகும்
பெண்களின் முக்கிய உள் உறுப்புகளில் ஒன்று கருப்பை ஆகும்
3. நாம் செய்யும் கர்மத்தின் பயனை நாமே அனுபவிப்போம்.
நாம் செய்யும் செயலின் பயனை நாமே அனுபவிப்போம்.
4. இராவணன் தசாவதானி ஆவான்
இராவணன் ஒரே நேரத்தில் பத்து செயல்களைச் செய்பவன் ஆவான்.
5. இருளில் கயிறைக் கண்ட நான் பாம்பு என நினைத்துத் திகிலடைந்தேன்.
இருளில் கயிறைக் கண்ட நான் பாம்பு என நினைத்து அதிர்ச்சியடைந்தேன்.
( தொடர்ச்சி அடுத்த இதழில் . . . )
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்–641020.
No comments:
Post a Comment