இதழ் - 191 இதழ் - ௧௯௧
நாள் : 15 / 02 / 2026 நாள் : ௧௫ / 0௨ / ௨௦௨௬
14. பாசிநிலை:
உழிஞையார் அகழிக்கரையில் நொச்சியாரின் வலிமைக் கெடப் போர்புரிவது.
15. ஏணிநிலை:
உழிஞை மறவர்கள் நொச்சியாளாரின் மதில்மேல் ஏணியைச் சாத்தியது.
16. எயிற்பாசி:
உழிஞையார் ஏணி மீது ஏறிச்செல்லும் நிலை.
17. முதுஉழிஞை:
உழிஞையார் பகைவருடைய மதிலின்மீது குதித்தல் மற்றும் உழிஞை ஒற்றன்
பகைவர் நிலையை அறிவித்தல்.
18. அகத்து உழிஞை:
மதிலின் அகத்து உழிஞையார் நொச்சியாரை வென்றது.
19. முற்றுமுதிர்வு:
நொச்சி வேந்தனின் முரசினது ஒலிகேட்டு உழிஞை வேந்தன் மிகுந்த சினம் கொள்வது
20. யானை கைக்கோள்:
நொச்சியாரின் யானைகளை உழிஞை மறவர்கள் கைப் பற்றுவது.
21. வேற்றுப்படை வரவு:
நொச்சியரசனுக்குத் துணை செய்ய வேற்றரசன் வருவது.
22. உழுது வித்திடுதல்:
நொச்சியாரின் அரணை அழித்து, கழுதைப் பூட்டி உழுது கவடி
(உண்ணாவரகு) விதைப்பது.
23. வாள்மண்ணுநிலை:
உழிஞை வேந்தனின் வெற்றி வாளைப் புனித நீராட்டுவது.
24. மண்ணுமங்கலம்:
வெற்றிப்பெற்ற உழிஞை வேந்தன் தன்னை மண மகனாக ஒப்பனைச் செய்வது.
25. மகட்பால் இகல்:
நொச்சியாரின் மகளை விரும்பி உழிஞை அரசன் மதில் புறத்தில் தங்கியிருத்தல்.
26. திறைகொண்டு பெயர்தல்:
நொச்சி வேந்தனிடமிருந்து திறைப் பொருளைப் பெற்று உழிஞையரசன் தன்
நாட்டிற்குத் திரும்புதல்.
27. அடிப்பட இருத்தல்:
பகைவர் நாடு தன் கீழ் அடிமைப்பட்டு இருப்பதற்காகப் பாசறைக்கண் தங்கியிருப்பது.
28. தொகைநிலை:
உழிஞை வேந்தனின் ஆற்றலைக் கண்ட பகை வேந்தர்கள் பலரும் அவனிடம்
தஞ்சம் புகுவது.
இலக்கணம் தொடரும் . . .
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020

No comments:
Post a Comment