இதழ் - 31 இதழ் - ௩௧
நாள் : 27-11-2022 நாள் : ௨௭ - ௧௧ - ௨௦௨௨- பிற உயிர்களுக்கு அன்பைத் தாராளமாக வழங்குங்கள்.
- பிற உயிர்களுக்கு அன்பை மிகுதியாக வழங்குங்கள்.
- நம்பியவர்களுக்கு துரோகம் இழைப்பது தீய செயலாகும்.
- நம்பியவர்களுக்கு இரண்டகம் செய்வது தீய செயலாகும்.
- துஷ்டனைக் கண்டால் தூரவிலகு என்பது பழமொழி.
- தீயவனைக் கண்டால் விலகிப் போய்விடு என்பது பழமொழி.
- தபால்துறையில் பல புதிய திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
- அஞ்சல்துறையில் பல புதிய திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
- தகராறு செய்வது நல்ல பழக்கம் அல்ல.
- சச்சரவு செய்வது நல்ல பழக்கம் அல்ல.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்...
சாந்தி மகாலிங்கசிவம்
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment