பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 67                                                                                           இதழ் -
நாள் : 06-08-2023                                                                           நாள் : 0-0-௨௦௨௩
 
      
 
உரிச்சொல்
 
    பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் இடமாகக் கொண்டு செய்யுளுக்கு உரிமையுடைய சொற்கள் உரிச்சொற்கள் ஆகும். இது குறிப்பும் பண்பும் உணர்த்தி, இயல்பான பொருளுக்கு வேறான பொருளைக் குறிப்பாகத் தருவதாகவும் இருக்கும்.

  • இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருட்கு உரியவாதலின் உரிச்சொல்லாயிற்று.
  • சொல்லின் பகுதியாக அமைகின்ற அடிச்சொல்லே உரிச்சொல்லாகும். 
  • இது பொருளின் தன்மையை மிகுதிப்படுத்தும். 

“பல்வகைப் பண்பும் பகர் பெயராகி
ஒரு குணம் பல குணம் தழுவிப் பெயர்வினை
ஒருவர் செய்யுட்குரியன உரிச்சொல்.”
     
                 - நன்னூல், நூற்பா. எண். 442

உரிச்சொல்லின் வகைகள்

உரிச்சொல் இரண்டு வகைப்படும்.
  • ஒருகுணம் தழுவிய பல உரிச்சொல்
  • பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல்

    இவ்வாறு தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்.
 
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

No comments:

Post a Comment