தமிழில் வழங்கப்படும் பிறமொழிச் சொற்கள் |
தமிழ்ச்சொற்கள் |
இந்திரன் |
வேந்தன் |
உத்தேசம் |
மதிப்பு |
உஷ்ணம் |
வெப்பம் |
சங்கடம் |
இடர்பாடு |
அற்புதம் |
மருட்கை |
- மருத நிலத் தெய்வமாக இந்திரனைக் கூறுவார்கள்.
- மருத நிலத் தெய்வமாக வேந்தனைக் கூறுவார்கள்.
- இது உத்தேசமாக 5 லட்சம் ரூபாய் வரும்.
- இதன் மதிப்பு 5 லட்சம் ரூபாய் வரும்.
- உஷ்ண காலத்தில் வீட்டுக்கு வெளியே பாத்திரத்தில் நீர் வையுங்கள்.
- வெப்ப காலத்தில் வீட்டுக்கு வெளியே பாத்திரத்தில் நீர் வையுங்கள்.
- நேர்மையாளர்கள் பல சங்கடங்களை அனுபவிப்பார்கள்.
- நேர்மையாளர்கள் பல இடர்பாடுகளை அனுபவிப்பார்கள்.
- இயற்கை பல அற்புதங்களை நிகழ்த்தும்.
- இயற்கை பல மருட்கைகளை நிகழ்த்தும்.
மேலும் வரும் வாரங்களில் தமிழ்மொழியில் வேறுமொழிகளின் சொற்கலப்பினை பிரித்துணர்ந்து அறிவோம்.
சாந்தி மகாலிங்கசிவம்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment