இதழ் - 28 இதழ் - ௨௮
நாள் : 05-11-2022 நாள் : 0௫ - ௧௧ - ௨௦௨௨
சொல் இலக்கணம்
எழுத்து தனித்து நின்றோ அல்லது பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருமாயின் அது சொல் எனப்படும். பொருளை அறிவதற்குக் கருவியாய் இருப்பது சொல்.
- சொல் இரு திணைகளையும், ஐந்து பால்களையும் குறிக்கும்.
- மூவகை இடங்களிலும் வரும்.
- உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் வரும்.
- வெளிப்படையாகவும், குறிப்பாகவும் பொருளை அறிவிக்கும்.
- சொல்லை வடமொழியில் பதம் என்பர்.
- இப்பதம், இருவகைப்படும்.
- பகுபதம்
- பகாபதம்
- பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி என்று பிரிக்கப்படும் சொல் அல்லது பதம் பகுபதம் ஆகும்.
- பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி என்று பிரிக்க முடியாதது பகாபதம் ஆகும்.
சான்று
- பகுபதம் - பார்த்தான் = பார் + த் + த் + ஆன்
- பகாபதம் - மண்
பகுபதம், பகாபதம் ஆகிய சொற்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
சொற்களின் இலக்கண வகை
- பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படும்.
சொற்களின் இலக்கிய வகைகள்
- இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்கு வகைப்படும்.
என இரண் டாகும் இடைஉரி அடுத்து
நான்கு மாம், திசை வடசொல், அணு காவழி
( நன்னூல் நூற்பா எண். 270 )
( தொடர்ந்து கற்போம் . . . )
தி.செ.மகேஸ்வரி
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயதி.செ.மகேஸ்வரி
தமிழாசிரியர்
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment