பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 168                                                                                 இதழ் - ௧
நாள் : 03 - 08 - 2025                                                             நாள் : ௩  - ௨௦௨




இலக்கணம் கற்போம்

பொருள் இலக்கணம்

முதற்பொருள்

     நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள் எனப்படும். உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் இவை ஆதாரமாக உள்ளதால் இவற்றை முதற்பொருள் என்பர்.


நிலம்
  • ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்கள் பின்வருமாறு :
    • குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்
    • முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
    • மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
    • நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்
    • பாலை - சுரமும் சுரம் சார்ந்த இடமும்
இலக்கணம் தொடரும் . . . 

திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்- 641020

No comments:

Post a Comment