இதழ் - 29 இதழ் - ௨௯
நாள் : 13-11-2022 நாள் : ௧௩ - ௧௧ - ௨௦௨௨
சொல் இலக்கணம் கற்போம்
முதலில் சொற்களின் வகைகள் பற்றிப் பார்ப்போம்.
"இயற்சொல் திரிசொல் இயல்பில் பெயர் வினை
என இரண்டாகும் இடை உரி அடுத்து
நான்கும் ஆம் திசை வட சொல் அணுகாவழி "
- நன்னூல் - 270
இயற்சொல்
“செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும்
தம்பொருள் விளக்கும் தன்னே இயற்சொல்”
- நன்னூல்-271
இயற்சொல்லை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
என இரண்டாகும் இடை உரி அடுத்து
நான்கும் ஆம் திசை வட சொல் அணுகாவழி "
- நன்னூல் - 270
இயற்சொல்
- இயற்சொல் என்பது செந்தமிழ் நாட்டில் வழங்கும் சொல்லாக இருக்கும்.
- வடிவமோ பொருளோ திரியாது விளங்கும்.
- கற்றவர்கள், கல்லாதவர்கள் அனைவராலும் எளிதில் பொருள் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
“செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும்
தம்பொருள் விளக்கும் தன்னே இயற்சொல்”
- நன்னூல்-271
இயற்சொல்லை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
பெயர் இயற்சொல்
எ.கா: மரம், மண்
வினை இயற்சொல்
எ.கா: பார்த்தான், வந்தது
இடை இயற்சொல்
எ.கா: மற்று, ஒன்று
உரி இயற்சொல்
எ.கா: உறு, புகழ்
தொடர்ந்து கற்போம் . . .
தி.செ.மகேஸ்வரி
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயதி.செ.மகேஸ்வரி
தமிழாசிரியர்
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment