க், ங் ஆகிய இரு மெய்களும் நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
ச், ஞ் ஆகிய இரு மெய்களும் நாவின் இடைப்பகுதி, நடு அண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
ட், ண் ஆகிய இரு மெய்களும் நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
த், ந் ஆகிய இரு மெய்களும் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கின்றன.
ப், ம் ஆகிய இரு மெய்களும் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கின்றன.
ய் - நாக்கின் அடிப்பகுதி, மேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கிறது.
ர், ழ் ஆகிய இரு மெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.
ல் - மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.
ள் - மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது.
வ் - மேல்வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கிறது.
ற், ன் ஆகிய இரு மெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன.
ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.
ஆய்த எழுத்து வாயைத்திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கிறது.
பிற சார்பெழுத்துகள் யாவும் தத்தம் முதல் எழுத்துகள் தோன்றும் இடங்களிலேயே அவை பிறப்பதற்கு உரிய முயற்சிகளைக் கொண்டு தாமும் பிறக்கின்றன.
தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
No comments:
Post a Comment