நாள் : 20-11-2022 நாள் : ௨௦ - ௧௧ - ௨௦௨௨
திரிசொல்
கற்றவர்கள் மட்டுமே பொருள் உணர்ந்து கொள்ளும் வகையில் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வரும் சொல் திரிசொல் எனப்படும்.
சான்று
- கிள்ளை - கிளி
- செப்பினான் - உரைத்தான்
- படர்ந்தான் - சென்றான்
- பெயர்த்திரிசொல் சான்று - அழுவம், வங்கம்
- வினைத்திரிசொல் சான்று - இயம்பினான், பயின்றாள்
- இடைத்திரிசொல் சான்று - அன்ன, மான
- உரித்திரிசொல் சான்று - கூர், கழி
ஒரு பொருள் குறித்த பல சொல் ஆகியும்
பல பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும்
அரிது உணர் பொருளன திரிசொல் ஆகும்
- நன்னூல். நூற்பா எண். 272
ஒரு பொருள் குறித்த பல திரிசொல்
பல பொருள் குறித்த ஒரு திரிசொல்
ஒரு பொருள் குறித்த பல திரிசொல்
- வங்கம், அம்பி, நாவாய் என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருவதால் ஒரு பொருள் குறித்த பல திரி சொல் என்பர்.
பல பொருள் குறித்த ஒரு திரிசொல்
- இதழ் என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண்ணிமை, பனையேடு, நாளிதழ் ஆகிய பல பொருள்களைத் தருவதால் பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனப்படும்.
மகேஸ்வரி தி. செ.
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்-641020
No comments:
Post a Comment